» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு!

ஞாயிறு 8, டிசம்பர் 2024 12:14:11 PM (IST)

ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி வடக்கு கடையனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் மகன் இப்ராஹிம் (28), இவர் ஏரல் சேர்மன் சாமி கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory