» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி!

ஞாயிறு 8, டிசம்பர் 2024 9:34:57 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி ஸ்பிக் நகர் எம். சவேரியார்புரம் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் மரியராஜன் மகன் விஸ்வராஜ் (36). கட்டிட தொழிலாளியான இவர் தற்போது நாசரேத் அருகிலுள்ள இடையன்விளையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று காலையில் தூத்துக்குடி ஸ்பிக் நகருக்கு கட்டிட வேலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். முக்காணி புதிய பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த விஸ்வராஜை ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விஸ்வராஜின் மனைவி தீபா ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors



Arputham Hospital



Thoothukudi Business Directory