» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல் : வாலிபர் கைது

வியாழன் 5, டிசம்பர் 2024 8:21:27 PM (IST)

கோவில்பட்டியில் விற்பனைக்காக 1கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  அருள் மேற்பார்வையில்  கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்  மீகா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி மேற்கு பூங்கா ரோட்டில் உள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அவர் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கலியுகபெருமாள் மகன் கார்த்திக் (31) என்பதும் அவர்  விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory