» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழைநீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள்: அமைச்சர் கீதாஜீவன் நடவடிக்கை!

வியாழன் 5, டிசம்பர் 2024 10:38:01 AM (IST)



தூத்துக்குடி 18, 19வது வார்டு பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு நடவடிக்கைகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் மழைகாலங்களில் முன்னெச்சாிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு பணிகளை திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திமுக மாவட்ட அலுவலகம் முகாம் அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு கண்டு வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 19வது வார்டான மகிழ்ச்சிபுரம், ராஜகோபால் நகர் மற்றும் மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மழைநீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்திய போது தற்காலிக சாலை அமைத்து தர ஏற்பாடு செய்தார். ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ஜான், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கா், வேல்முருகன்,  பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி உள்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors






Thoothukudi Business Directory