» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உண்டியல் பணம் திருட்டு : பெண் காவலர் பணியிடை நீக்கம்!

வியாழன் 5, டிசம்பர் 2024 8:21:42 AM (IST)

சங்கரன்கோவிலில் கோயில் உண்டியல் பணத்தைத் திருடியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி கடந்த நவ. 26இல் நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி தென்பாகம் காவலர் மகேஸ்வரி (42) உள்ளிட்ட 4 பெண்கள் பணத்தைத் திருடியது தெரியவந்தது. புகாரின்பேரில், சங்கரன்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஸ்ரீனிவாசன் விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்பேரில், அவர் காவலர் மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory