» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

வெள்ளி 29, நவம்பர் 2024 5:41:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று 4வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

கனமழை, புயல் எச்சரிக்கையை முன்னிட்டு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.  

மேலும் பெரும்பாலான நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதுபோல் நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் சுமார் 4 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory