» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!
ஞாயிறு 10, நவம்பர் 2024 12:23:06 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.60லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மரைன் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று இரவு முத்தையாபுரம் கோவளம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கோவளம் கடற்கரை ஒட்டி உள்ள பாலத்துக்கு கீழே பீடி பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
அதனை பிரித்து பார்த்தபோது, தலா 30 கிலோ வீதம் 65 பீடி பண்டல்களில் சுமார் 2000 கிலோ பீடி இலைகள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் கொண்டு வந்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதை கடத்தி வந்தவர்கள் யார் என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் : சிபிஎம் கோரிக்கை!
ஞாயிறு 18, மே 2025 11:55:44 AM (IST)

திருமண விழாவுக்கு வந்த வாலிபர் லாரி மோதி பலி : கோவில்பட்டியில் பரிதாபம்
ஞாயிறு 18, மே 2025 10:57:41 AM (IST)

தூத்துக்குடியில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 18, மே 2025 10:47:27 AM (IST)

தமிழீழ இனப்படுகொலை தினம்: த.வெ.க. அஞ்சலி!
ஞாயிறு 18, மே 2025 10:36:29 AM (IST)

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா பூமிபூஜையுடன் பணிகள் தொடக்கம்!
ஞாயிறு 18, மே 2025 10:26:27 AM (IST)

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ஞாயிறு 18, மே 2025 10:19:02 AM (IST)
