» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்!

ஞாயிறு 10, நவம்பர் 2024 12:23:06 PM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.60லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மரைன் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று இரவு முத்தையாபுரம் கோவளம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கோவளம் கடற்கரை ஒட்டி உள்ள பாலத்துக்கு கீழே பீடி பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. 

அதனை பிரித்து பார்த்தபோது, தலா 30 கிலோ வீதம்  65 பீடி பண்டல்களில் சுமார் 2000 கிலோ பீடி இலைகள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். இந்த பீடி இலைகளை சட்ட விரோதமாக மர்ம நபர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் கொண்டு வந்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதை கடத்தி வந்தவர்கள் யார் என்பதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education


New Shape Tailors




Thoothukudi Business Directory