» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா

ஞாயிறு 10, நவம்பர் 2024 9:30:25 AM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா  நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சத்யா கலந்து கொண்டு மாணவ,மாணவியர்க்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்சன், திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி மேனேஜர் பிரேம்குமார் ராஜாசிங், குருத்துவ நிலவரக்குழு செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக், திருமண்டல பொருளாளர் அருள்திரு.டேவிட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory