» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊராட்சித் தலைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

திங்கள் 4, நவம்பர் 2024 8:33:28 AM (IST)

கோவில்பட்டி அருகே ஊராட்சித் தலைவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பீக்கிலிபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த வீரபெருமாள் மகன் முருகேசன் (54). இவர் பீக்கிலிப்பட்டி ஊராட்சித் தலைவராகவும், திமுக மத்திய ஒன்றியச் செயலராகவும் உள்ளார்.

சம்பவத்தன்று இரவு, இவர் குடியிருக்கும் தெரு வழியாக அதே ஊரைச் சேர்ந்த வேலு மகன் முனியசாமி (55) பைக்கில் சென்றார். அப்போது, ஜல்லிக்கற்கள் மீது பைக் ஏறியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். பின்னர், அவர் ஊராட்சித் தலைவரின் வீட்டைப் பார்த்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முருகேசன் கேட்டபோது, அவரை முனியசாமி அவதூறாகப் பேசி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து, முனியசாமியை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors


CSC Computer Education



Thoothukudi Business Directory