» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு!
புதன் 30, அக்டோபர் 2024 6:30:30 PM (IST)

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பா. மூர்த்தி ஆய்வு செய்தார்.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று (30.10.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் , ஒரு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 8 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 28 காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பாக 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.
மேற்படி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு திருநெல்வேலி சாரக காவல்துறை துணை தலைவர் பா. மூர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ரோந்து மேற்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான தோட்டிலோவன்பன்பட்டி, சென்னம்மரெட்டிபட்டி மற்றும் கோடங்கிபட்டி ஆகிய சோதனை சாவடிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயனைப்பு வீரர்களுக்கு பாராட்டு!!
திங்கள் 19, மே 2025 9:12:26 PM (IST)

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி!
திங்கள் 19, மே 2025 8:25:46 PM (IST)

தயவுசெய்து இணையதளத்தில் படம் பார்க்காதீர்கள் : தூத்துக்குடியில் நடிகர் சூரி பேட்டி
திங்கள் 19, மே 2025 8:13:32 PM (IST)

அரசு மருத்துவர் பணி நீக்கம்: ரூ.40 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் தீர்ப்பு
திங்கள் 19, மே 2025 5:44:03 PM (IST)

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 19, மே 2025 5:30:27 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை
திங்கள் 19, மே 2025 5:21:38 PM (IST)
