» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை ஜோர்: பட்டாசு, இனிப்பு கடைகளில் மக்கள் அலைமோதல்!
புதன் 30, அக்டோபர் 2024 3:48:25 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கொண்டாடப்படுகிறது. இதற்காக கடந்த சில நாட்களாக ஜவுளி கடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. புத்தாடைகள், பொருட்களை வாங்கிச்சென்றனர். இந்த நிலையில் இன்று தீபாவளி பொருட்கள் வாங்குவதற்கு கடைசி நாள் என்பதால் இறுதி கட்ட விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
தூத்துக்குடி பஜார் பகுதிகளில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இனிப்பு, பலகாரங்களை வாங்குவதற்கு மிட்டாய் கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். தங்களது வீடுகளுக்கும், நண்பர்களுக்கு கொடுப்பதற்கும் ½ கிலோ, 1 கிலோ என இனிப்பு வகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் இனிப்பு கடைகள் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மேலும் வெடி கடைகளில் இறுதிக்கட்ட பட்டாசு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. குழந்தைகள் பெற்றோருடன் வந்து தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கிச்செல்கின்றனர். இதே போல் பூக்கடைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:26:28 PM (IST)

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:22:35 PM (IST)

லாக்அப் படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு: வாலிபர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 3:13:02 PM (IST)

இத்தனை விபத்துகள் நேர்ந்த பின்னும், மத்திய அரசுக்கு துளியளவும் கவலை இல்லை: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 12:37:58 PM (IST)

தூத்துக்குடியில் கார் மீது கலவை இயந்திரம் மோதல்: ஒருவர் காயம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 11:15:42 AM (IST)

நிலுவை கடன்களை வசூலிக்க முடியாமல் வீட்டு வசதி சங்கங்கள் திண்டாட்டம்: ஊழியர்கள் தவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 10:22:55 AM (IST)
