» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அக்.10ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

புதன் 9, அக்டோபர் 2024 4:41:07 PM (IST)

தூத்துக்குடியில் நாளை (அக்.10) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின்வாரிய செய்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் 110/22-11கிவோ அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் வருகின்ற 10.10.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் மாலை 14:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும் கீழ அரசடி, மேல அரசடி, திரேஸ்புரம் ,சாகிர் உசேன் நகர்,  டேவிஸ்புரம்,  ஜீவா நகர், அலங்கார தட்டு, நேருகாலனி கிழக்கு, சுனாமிநகர், வாலசமுத்திரம், பூபாலராயர் புரம், மாணிக்கபுரம், வெற்றிவேல் புரம், சங்குகுளி காலனி,  தளவாய்புரம்,  பட்டிணமருதூர், ராமர்விளை, மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், ஆரோக்கியபுரம்,  தாளமுத்துநகர்,  

கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ண புரம், ஹைசிங்போர்டு,  குமரன் நகர், கோவில்பிள்ளை விளை,  குருஸ்புரம், பண்ணையூர், வெள்ளப்பட்டி, தருவைகுளம்,  T.சவேரியர்புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, ஆனந்தமாடன் பச்சேரி,  உப்பள பகுதி, முத்தையார் காலனி, அ.குமாரபுரம், மேலமருதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory