» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக கவுன்சிலர் கைது!

வெள்ளி 4, அக்டோபர் 2024 8:41:05 AM (IST)

ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலரை தாக்கியதாக கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் முருகன் (58). இவர் சம்பவத்தன்று பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, 6ஆவது வார்டு கவுன்சிலரான பிச்சமுத்து என்ற சிவா, தனது வார்டில் மழைநீர் அகற்றும் பணி முறையாக செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த முருகன், காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி வழக்குப் பதிவு செய்து பிச்சமுது என்ற சிவாவை (46) கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory