» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ மீது மினி லாரி மோதல்: 11 பேர் காயம்!

வெள்ளி 4, அக்டோபர் 2024 8:37:05 AM (IST)

குலசேகரன்பட்டினம் அருகே லோடு ஆட்டோ - மினி லாரி மோதிய விபத்தில் பக்தர்கள் 11 பேர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு செக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் நேற்று லோடு ஆட்டோவில் வந்து கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றுவிட்டு மாலையில் திருச்செந்தூர் சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

உடன்குடி அனல்மின் நிலையம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்றபோது எதிரே வந்த மினி லாரி மீது லோடு ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 11 பேரும் காயமடைந்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்றனர். இவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory