» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி மாயம் : தந்தை போலீசில் புகார்

வெள்ளி 4, அக்டோபர் 2024 8:31:44 AM (IST)

குலசேகரன்பட்டினத்தில்  கோயிலுக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள படுக்கப்பத்து பகுதியை சேர்ந்தவர் மகாராஜா (47). கட்டடத் தொழிலாளி. இவரது மகள் பிரியா (17). கல்லூரி மாணவியான இவர், கடந்த 27ஆம் தேதி குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். மாலையில் தந்தை தொடர்பு கொண்டபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. 

மாணவியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை, தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் பொன்னுமுனியசாமி வழக்கு பதிவு செய்தார். மாயமானமாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory