» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!
திங்கள் 30, செப்டம்பர் 2024 10:39:26 AM (IST)
தூத்துக்குடியில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பி & டி காலனி 13வது தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் செல்வகணபதி (48), இவர் தூத்துக்குடி வணிகவரி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளாவில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.
பின்னர் இன்று காலை ஊர் திரும்பினார். அப்போது வீட்டில் கதவில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்க்க போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை, மற்றும் ரூ.12,500 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் செல்வ கணபதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
