» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் ஐக்கியம்
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:30:23 AM (IST)

இனாம் மணியாச்சியில் அதிமுகவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், இனாம் மணியாச்சியில் நடைபெற்ற கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த சத்திரப்பட்டி முன்னாள் கிளைச் செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் முருகலட்சுமி ஆகியோர் தலைமையில் முருகன், மாரித்தாய், கஸ்தூரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின் போது உடன் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தி. தாமோதரக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துமாரி, நிர்மலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
