» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணம் நிச்சயமான இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 12, செப்டம்பர் 2024 11:13:16 AM (IST)
தூத்துக்குடியில் திருமணம் நிச்சயமான இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு சோட்டையன் தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. கூலி தொழிலாளி. இவரது மகள் முருகேஸ்வரி (27), பி.காம் பட்டதாரியான இவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிற 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்ததாம். இதற்காக உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் அவரது தந்தை செல்லையா கஷ்டப்பட்டு வந்ததாராம். இதனால் மன வேதனையடைந்த முருகேஸ்வரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்கு பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் (பொ) ஷோபா ஜென்ஸி விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)

வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு: தூய்மை பாரத ஓட்டுநர் பணியாளர் நலச்சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 8, ஜூலை 2025 8:04:55 PM (IST)

தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணி: ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் ஆய்வு!
செவ்வாய் 8, ஜூலை 2025 7:58:34 PM (IST)

மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வழங்கப்படும் : ஆட்சியர்
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:26:25 PM (IST)
