» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 11:26:42 AM (IST)
தூத்துக்குடியில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் மனைவி கல்யாணி (40) இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தனது ஸ்கூட்டியில் டுவிபுரம் ரோட்டில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த ஒரு வாலிபர் கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார்.
இதையறிந்த கல்யாணி அவனை காலால் எட்டி உதைத்ததில், அந்த வாலிபர் நிலை தடுமாறி பின்னர் சுதாரித்துக் கொண்டு பைக்கில் வேகமாக தப்பிச்சென்றுவிட்டார். இதனால் கல்யாணியின் நகை தப்பியது. இது குறித்து அவர் மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து, நகை பறிக்க முயன்ற வாலிபரை தேடி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
வியாழன் 10, ஜூலை 2025 7:29:04 AM (IST)

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு பணி : போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!
வியாழன் 10, ஜூலை 2025 7:23:07 AM (IST)

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
வியாழன் 10, ஜூலை 2025 7:08:14 AM (IST)

ரயில் விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எம்பவர் இந்தியா கோரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 4:56:34 PM (IST)
