» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய அளவிலான தடகள போட்டிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்களைகள்!

திங்கள் 15, ஜூலை 2024 11:10:36 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து தேசிய அளவிலான தடகள போட்டிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களை பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தடகள மாற்றுத்திறனாளி வீரர்கள் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டி எறிதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுகளில்  தமிழக அளவில் வெற்றி பெற்று, பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்கின்றனர். 

தேசிய அளவிலான தடகள போட்டிக்கு செல்லும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர்களை தூத்துக்குடி பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக துணைத் தலைவர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பயிற்சியாளர் மற்றும் சங்க செயலாளர் ஸ்டீபன் மற்றும் நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் வீரர்களின் பெற்றோர்கள் பொருளாளர் நீலராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory