» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகம் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா!

திங்கள் 15, ஜூலை 2024 8:15:54 AM (IST)



தூத்துக்குடியில் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா அழகர் மஹாலில் நடந்தது.

ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குநர் பாலு  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார். இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் & சிபிஐ சிறப்பு அரசு வழக்குரைஞர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கினார். 40 ஆண்டுகளாக தொடரும் சேவையில் இந்த ஆண்டு 200 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப் பட்டது. 

32 பேருக்கு பள்ளி, கல்லூரி கட்டண உதவித் தொகையாக ரூ.1,50,000 நிதியுதவி வழங்கப் பட்டது. இலவசமாக நடத்தப்படும் மாலை நேர டியூசன் மைய ஆசிரியர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், சுந்தரேசன், ராஜ்குமார், சாத்தப்பன், மாணிக்கராஜ், மணிபாரதி, ஜெயக்குமார், கருப்பசாமி, ராஜாகாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital



New Shape Tailors






Thoothukudi Business Directory