» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்களின் விலை குறைந்தது : பொதுமக்கள் மகிழ்ச்சி!
சனி 13, ஜூலை 2024 5:27:28 PM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டு படகுகள் இன்று அதிகாலை கரை திரும்பின இன்று சனிக்கிழமை என்பதால் மீன்பிடி துறைமுக ஏழக்கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது.
சிறிய வகை சீலா மீன் கிலோ 400 முதல் 500 ரூபாய் வரையும், பெரிய சீலா மீன் 800 ரூபாய் வரையும், விளை மீன் கிலோ 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும், ஊளி மீன் கிலோ 300 ரூபாய் வரையும் பாறை மீன் கிலோ 300 ரூபாய் வரையும், கடல் விரால் கிலோ 400 ரூபாய் வரையும், குருவலை ஐலேஷ் உள்ளிட்ட மீன்கள் கிலோ 200 ரூபாய் வரையும் விற்பனையானது.
சால மீன்கள் ஒரு கூடை ஆயிரம் ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விற்பனையானது. மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் மீன்களை வாங்க வந்த பொதுமக்களும் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐஏஎஸ் தேர்வில் விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவன் வெற்றி!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 9:46:04 PM (IST)

தூத்துக்குடியில் தீக்குளித்த தனியார் நிறுவன ஊழியர் சாவு : போலீஸ் விசாரணை
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:35:24 PM (IST)

மருத்துவ சிகிச்சை தரவரிசை பட்டியலில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய சாதனை!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:29:28 PM (IST)

நாசரேத் அருகே கிரிக்கெட் போட்டி: பாட்டக்கரை அணி கோப்பையை வென்றது!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:17:11 PM (IST)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் திடீர் மழை : மின்னல் தாக்கியதில் பசு மாடு உயிரிழப்பு
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:10:39 PM (IST)

மேலச்செவல் டிடிடிஏ பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டிடம்: ராபர்ட் புரூஸ் எம்.பி. திறந்து வைத்தார்.
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 8:03:21 PM (IST)
