» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்: 15ஆம் தேதி தொடக்கம்
சனி 13, ஜூலை 2024 5:12:34 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் வருகிற 15ஆம் தேதி முதல் ஆக.13 வரை மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


இம்முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 44 வகையான சேவைகளை பெறுவதற்கான கோரிக்கை மனுக்களை மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் அளித்து பயன்பெறலாம்.
எனவே தூத்துக்குடி மாவட்ட ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி நேரடியாக கோரிக்கைகளைப் பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் நடத்தப்படும் ‘மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாம்களில் பொது மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் கனிமொழி எம்.பி., பேச்சு!
சனி 24, மே 2025 11:40:46 AM (IST)

நாளை திருமணம்: காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடி அருகே சோகம்!!
சனி 24, மே 2025 11:36:45 AM (IST)

குடிநீர் விரயம்: சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம்
சனி 24, மே 2025 10:46:56 AM (IST)

மயானத்திற்கு செல்லும் பாதையில் பிரச்சனை : கோட்டாட்சியர் விசாரணை
சனி 24, மே 2025 10:21:19 AM (IST)

சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை
சனி 24, மே 2025 8:39:40 AM (IST)

தூத்துக்குடியில் துப்பாக்கி முனையில் ரவுடி கைது : பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!
சனி 24, மே 2025 8:22:31 AM (IST)

C.PatturajJul 14, 2024 - 09:04:49 AM | Posted IP 162.1*****