» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விஷ வண்டுகள் அச்சுறுத்தல்: எப்சிஐ குடோனில் ஆய்வு செய்ய அதிமுக கோரிக்கை!

திங்கள் 8, ஜூலை 2024 11:33:43 AM (IST)



தூத்துக்குடியில் எப்.சி.ஐ., குடோன் பகுதியில் இருந்து பரவி வரும் விஷவண்டுகளை ஒழிக்க அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்ய வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி பாளை ரோட்டில் அமைந்துள்ள இந்திய உணவு கழகத்திற்கு சொந்தமான (F.C.I) குடோனில் சமீப காலமாக உற்பத்தியாகும் ஒரு வித விஷவண்டுகள் அருகில் அமைந்துள்ள மக்கள் அதிகம் வசிக்கும் தபால் தந்தி காலனி, பசும்பொன்நகர், ஆசிர்வாதநகர், முத்துநகர், இந்திராநகர், திரு.வி.க நகர் பகுதிகளில் பரவி உணவுப் பொருட்களிலும், பெரியவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை அனைவரையும் கடித்து ஒருவித ஊரல் நோய் ஏற்பட்டு மக்கள் தூக்கம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

மேலும் உணவு பொருட்களில் விழுவதால் உணவு விஷமாக மாற வாய்ப்புள்ளது. 3வது மைல் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டுனரின் கண்களில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே தாங்கள் மேற்படி FCI குடோனை நேரில் களஆய்வு செய்து விஷ வண்டுகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory