» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வர பாதை திறப்பு: ஆட்சியர் நடவடிக்கை!!
செவ்வாய் 25, ஜூன் 2024 3:38:13 PM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கீழ வேலாயுதபுரம் கிராமத்திலிருந்து மேல வேலாயுதபுரம் கிராமத்திற்கு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வரவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பாதை திறந்துவிடப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம், புதூர் பாண்டியாபுரம் கிராமம் மஜரா மேல வேலாயுதபுரம் கிராமம் புஞ்சை புல எண் 145/3 ல் 0.36.0 ஹெக்டேர் நிலம் மேகலிங்கம் மகன் லிங்கமுத்து என்பவர் பெயரில் உள்ளது. மேற்படி புலத்திலிருந்து கீழ வேலாயுதபுரம் கிராமத்திற்கு விளக்கிப்பாதை கிராம கணக்கில் உள்ளது. மேற்படி பாதை வழியாக கீழ வேலாயுதபுரம் கிராமத்திலிருந்து மேல வேலாயுதபுரம் கிராமத்திற்கு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வரவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது மேகலிங்கம் மகன் லிங்கமுத்து என்பவர் பொது பயன்பாட்டிற்காகவும், குழந்தைகள் பள்ளி சென்று வர பயன்படுத்தி வந்த மேற்படி விளக்கி பாதையினை அடைத்து வைத்ததாகவும், அதனால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லாமல் இருப்பதாகவும் வந்த தகவலை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, அறிவுறுத்தலின்பேரில், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மேற்படி இடத்தினை பார்வையிட்டும், மேற்படி கீழ வேலாயுதபுரம் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மேற்படி விளக்கிப் பாதையினை திறந்துவிட்டனர். இதையடுத்து தற்போது வழக்கம்போல் குழந்தைகள் அந்த பாதை வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு
சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் பாதிப்பு : அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சனி 22, மார்ச் 2025 5:13:31 PM (IST)

திருமண்டல சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக தண்ணீர் தினம்!
சனி 22, மார்ச் 2025 5:04:35 PM (IST)

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
