» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் பக்தரிடம் பணம் திருடிய வாலிபர் கைது!
வெள்ளி 21, ஜூன் 2024 10:41:45 AM (IST)
திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் பெண் பக்தரிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராம் மகன் ராஜேஷ் (42). இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது மனைவியுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த ரூபாய் 450 பணத்தை திருடினார்.
உடனே அருகில் இருந்த பக்தர்கள் அந்த வாலிபரை பிடித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர், நெல்லை சுத்தமல்லி வஉசி தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் கரிஹரசுதன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
