» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்!

வெள்ளி 21, ஜூன் 2024 8:21:47 AM (IST)

தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்கு பின்னர் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நீக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஓசூர் வழியாக மைசூருவுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரு மார்க்கங்களிலும் தென்மேற்கு மண்டல ரயில்வே மூலம் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வ.எண்.16235) தூத்துக்குடியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 7 மணிக்கு பெங்களூருவுக்கும், காலை 10.20 மணிக்கு மைசூருவுக்கும் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.16236) மைசூருவில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.25 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. காலை 10.45 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும், 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளும், 2 பொதுப்பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். 

மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், கரூர், புகளூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, பாலக்கோடு, ஓசூர், கார்மேலரம், பெங்களூரு கண்டோன்மெண்ட், பெங்களூரு, ஹெங்கேரி, ராமநகரம், சென்னாபட்டணம், மடூர், மாண்டியா, பாண்டவபுரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

பொதுவாக ரயில்களில் பயணம் செய்வதற்கு 120 நாட்களுக்கு முன்பு இருக்கைகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதற்கிடையே, இந்த ரயிலில் இரு மார்க்கங்களிலும் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்கு பின்னர் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால் முன்னதாக இருக்கை உறுதி செய்து பயணம் செய்யும் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். 

இது குறித்து தென்மேற்கு மண்டல ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் எண் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், இந்த ரயிலில் முன்பதிவு வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் புதிய ரயில் எண் வழங்கப்பட்டு, வழக்கம் போல முன்பதிவு செய்யலாம். எனவே பயணிகள் பயப்பட தேவையில்லை. மேலும் இது ரயில் எண் மாற்றப்படும் போதும், எக்ஸ்பிரஸ் ரயில் சூப்பர்பாஸ்ட் ரயிலாக மாற்றப்படும் போதும் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை என்று தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

A GIRIJun 21, 2024 - 01:46:48 PM | Posted IP 162.1*****

தவறான செய்தி.  120 நாட்கள் முன்பதிவு நாளான அக்டோபர் 19ம் தேதி வரை அனைத்து  வகுப்புகளுக்கும் தூத்துக்குடி-மைசூர் விரைவு ரயிலில் இருமார்கங்களிலும் முன்பதிவு தடையின்றி நடை பெறுகிறது.  IRCTC Next Generation eTicketing System விபரம் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் காணலாம்.  TN MYSURU EXP (16235)Runs On: MTWTFSSTrain Schedule17:15 | TUTICORIN | Thu, 17 Oct17:0510:20 | MYSURU JN | Fri, 18 Oct Sleeper (SL) AC Chair car (CC) AC 3 Tier (3A) AC 2 Tier (2A) Thu, 17 Oct AVAILABLE-0219 Fri, 18 Oct AVAILABLE-0225 Sat, 19 Oct AVAILABLE-0225

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory