» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளர் பலி

வெள்ளி 21, ஜூன் 2024 8:13:34 AM (IST)

தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கோக்கரசன் கோட்டையைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் உமையபாண்டி (48). இவர் தெர்மல் நகர் அருகே உள்ள தனியார் கிட்டங்கியில் தங்கியிருந்து, தூய்மைப் பணியாளராகவும், ஆட்களை வேலைக்கு அனுப்பும் பணியும் செய்து வந்தாராம். இவர் நேற்று காலை துறைமுக சாலையில் திருச்செந்தூர் ரவுண்டான அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

அப்பகுதியினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education




Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory