» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளர் பலி
வெள்ளி 21, ஜூன் 2024 8:13:34 AM (IST)
தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கோக்கரசன் கோட்டையைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் உமையபாண்டி (48). இவர் தெர்மல் நகர் அருகே உள்ள தனியார் கிட்டங்கியில் தங்கியிருந்து, தூய்மைப் பணியாளராகவும், ஆட்களை வேலைக்கு அனுப்பும் பணியும் செய்து வந்தாராம். இவர் நேற்று காலை துறைமுக சாலையில் திருச்செந்தூர் ரவுண்டான அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
அப்பகுதியினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மே.16ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
திங்கள் 12, மே 2025 4:29:20 PM (IST)

மே 15ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
திங்கள் 12, மே 2025 3:55:35 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 3:45:31 PM (IST)

அரசு மருத்துவமனையில் ரூ.49 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடம் : கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்
திங்கள் 12, மே 2025 3:37:21 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் கைது
திங்கள் 12, மே 2025 3:15:10 PM (IST)

கருகும் நிலையில் வாழைப்பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!
திங்கள் 12, மே 2025 12:04:24 PM (IST)
