» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூன் 26-க்கு ஒத்திவைப்பு

வியாழன் 20, ஜூன் 2024 7:47:17 AM (IST)

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சரின் மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த ராமகிருஷ்;ணன், ஆனந்த மகேஸ்வரன் மற்றும் சகோதரர்கள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஜின்னா அமலாக்க த்துறை மனுவிற்கு எதிராக ஆஜராகி வாதாடினார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமலாக்கத் துறை வழக்குரைஞர் ரமேஷ் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஐயப்பன், இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory