» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாயை அடித்துக்கொன்ற விவகாரம்; சிசிடிவி கேமராவை வாளால் சேதப்படுத்தியவர் கைது
புதன் 19, ஜூன் 2024 11:10:59 PM (IST)
கோவில்பட்டியில் பெண்ணை மிரட்டி வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து வாள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 17.06.2024 அன்று அதிகாலை மேற்படி பெண்ணின் வீட்டிற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் சுந்தர் (29) என்பவர் மேற்படி மகேஷ்குமார், ஜெபக்குமார், சோலைராஜ் ஆகியோர் தனது நண்பர்கள் என்றும் நாயை அடித்துக் கொன்ற வழக்கில் அவர்கள் மீது எப்படி புகார் கொடுக்கலாம் என்றும் சுந்தர் கையில் வாளுடன் மேற்படி பெண்ணை மிரட்டியதுடன் அவர் வீட்டு வாசலில் இருந்த சிசிடிவி கேமராவையும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து மேற்படி பெண் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுந்தரை கைது செய்து அவரிடமிருந்த வாளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் : சிபிஎம் கோரிக்கை!
ஞாயிறு 18, மே 2025 11:55:44 AM (IST)

திருமண விழாவுக்கு வந்த வாலிபர் லாரி மோதி பலி : கோவில்பட்டியில் பரிதாபம்
ஞாயிறு 18, மே 2025 10:57:41 AM (IST)

தூத்துக்குடியில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 18, மே 2025 10:47:27 AM (IST)

தமிழீழ இனப்படுகொலை தினம்: த.வெ.க. அஞ்சலி!
ஞாயிறு 18, மே 2025 10:36:29 AM (IST)

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா பூமிபூஜையுடன் பணிகள் தொடக்கம்!
ஞாயிறு 18, மே 2025 10:26:27 AM (IST)

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
ஞாயிறு 18, மே 2025 10:19:02 AM (IST)
