» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாய்க்கால் அருகில் தோண்டப்பட்ட ராட்சத குழியை மூட கோரிக்கை!
திங்கள் 20, நவம்பர் 2023 3:13:43 PM (IST)
துப்பாஸ்பட்டி கன்மாய்க்கு தண்ணீர் வரும் வாய்க்கால் அருகில் தோண்டப்பட்ட ராட்சத குழாயை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆ. கீழஅரசடி முன்னாள் ஊராட்சி தலைவர் ஜேசுதாசன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கீழ அரசடி ஊராட்சி துப்பாஸ்பட்டி கன்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி. மேற்படி கன்மாய்க்கு அருகில் ஊராட்சி நிர்வாகம் இராட்சச 100 அடி குழி தோண்டி மணல் எடுத்துவிட்டார்கள்.
கன்மாய்க்கு தண்ணீர் வரும் வாய்க்கால்அருகில் தோண்டியதால் கன்மாயில் உள்ள குடிநீர் எடுக்கும் கிணற்றிற்கு அருகில் தண்ணீர் வர வில்லை. கிணற்று அருகில் தடுப்பு சுவர் கட்டுகிறார்கள் ஊராட்சி தலைவர் மதன் இந்த கான்ட்ராக்ட்டை எடுத்து செய்து வருகின்றார். வட்டார வளர்ச்சி அலுவலர். ஒன்றிய பொறியாளர் ஆகியோர் பார்வையிட்டு இனி வரும் மழைக் காலங்களிலாவது வரும் தண்ணீரை சேமித்து வைக்க தோண்டப்பட்ட இராட்சச குழியை மூட போர்க்கால அடிப்படையில் நடவெடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஒய்வூதியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு!
ஞாயிறு 18, மே 2025 7:21:26 PM (IST)

கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து: 45 பவுன் நகைகள் மீட்பு
ஞாயிறு 18, மே 2025 6:58:59 PM (IST)

தூத்துக்குடி கடலில் அத்துமீறி மீன் பிடித்த கேரள மீனவர்கள் 17 பேர் கைது : விசைப்படகு பறிமுதல்
ஞாயிறு 18, மே 2025 6:44:19 PM (IST)

தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் : சிபிஎம் கோரிக்கை!
ஞாயிறு 18, மே 2025 11:55:44 AM (IST)

திருமண விழாவுக்கு வந்த வாலிபர் லாரி மோதி பலி : கோவில்பட்டியில் பரிதாபம்
ஞாயிறு 18, மே 2025 10:57:41 AM (IST)

தூத்துக்குடியில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 18, மே 2025 10:47:27 AM (IST)
