» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் அகில பாரத இந்து மகா சபா சார்பாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை!

திங்கள் 18, செப்டம்பர் 2023 12:35:11 PM (IST)



நாசரேத் பகுதியில் விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலையத்திற்குட்பட்ட மணிநகர், ஞானராஜ்நகர், கந்தசாமிபுரம், நாசரேத் கே.வி.கே.சாமி சிலை பஜார், வடலிவிளை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாசரேத் அருகிலுள்ள வடலிவிளை கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இன்று அனைத்து சிலைகளும் நாசரேத் சக்தி விநாயகர் ஆலயம் முன்பாக மாலையில் புறப்பட்டு மெஞ்ஞானபுரம்,உடன்குடி, குலசே கரப்பட்டிணம் வழியாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோவில்கடற்கரையில் விஜர்சனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத இந்து மகா சபா மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory