» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பனிமய மாதா தங்கத்தேர் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் : பங்குத்தந்தை பேட்டி
சனி 22, ஜூலை 2023 4:21:32 PM (IST)

தூத்துக்குடியில் புனித பனிமய மாதா பேராலய தங்கத்தேரில் 9ஆயிரம் அமெரிக்க வைர கற்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருவதாக பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான குமார் ராஜா தெரிவித்தார்.
தூத்துக்குடியில் உலக புகழ் பெற்ற புனித பனிமய மாதா பேராலயத்தின் தங்கத் தேர் திருவிழா வரும் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவின் சிகர நிகழ்வான தங்கத்தேர் பவனி வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து சுமார் 216 ஆண்டுகள் பழைமையான தேர் புதுப்பித்து, அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தங்கத் தேர் திருவிழா தொடங்குவதற்கு சில தினங்களே உள்ளதால், இது குறித்து பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான குமார் ராஜா சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற புனித பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்த பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா மற்றும் 16 ஆவது தங்கத் தேர் திருவிழா வருகிற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதில், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்கு தந்தையர் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். இந்த விழாவில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இத்திருவிழாவின் முக்கிய திருவிழாவான தங்கத்தேர் பவனி திருவிழா வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர் பவனி திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகின்றனர். பின்னர் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைக்கிறார்.
ஜெபமாலையில் உள்ள 53 மணிகளை அடிப்படையாகக் கொண்டு, இத்தேர் 53 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இத்தேர் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில், புதுப்பித்து அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழமையான தேர் என்பதால் 80 சதவீதம் வரை புதிதாக கேரளா மாநிலத்தில் இருந்து தேக்கு மரத்தடிகள் வரவழைக்கப்பட்டு, அதன்மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஜப்பான் நாட்டிலிருந்து வர அழைக்கப்பட்ட தங்க தாள்கள், அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 9,000 வைரக்கற்கள் ஆகியவை கொண்டு தங்கத்தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். பேட்டின்போது பங்கு பேரவை துணைத் தலைவர் ஹாட்லின், செயலாளர கென்னடி, பொருளாளர் ஜாய் ரோச் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
தமியான் லீனஸ்Jul 22, 2023 - 04:35:45 PM | Posted IP 172.7*****
05/08/2023 அன்று அன்னையின் தங்கதேர் பவனி முடிந்த பின்னர் அன்று இரவு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் விட வேண்டும் 🙏
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)

அந்தோணி சாமிJul 22, 2023 - 07:24:59 PM | Posted IP 172.7*****