» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மண்ணெண்ணெய் பாட்டில்களில் தீவைத்து வீசிய வாலிபர் கைது!

வெள்ளி 26, மே 2023 11:35:22 AM (IST)

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டிலில் தீவைத்து வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சாந்தி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஜனாரி மனைவி மீரா (44), இவருக்கும் எம்பரர் தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கெளதம் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கெளதம் மீராவின் வீட்டின் முன்பு மண்ணெண்ணெய் பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசியுள்ளார். இதுகுறித்து மீரா அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப் இன்பெக்டர் முகிலரசன் வழக்குப் பதித்து கெளதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads











Thoothukudi Business Directory