» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 97.36% தேர்ச்சி: தமிழகத்தில் 5வது இடம் பிடித்தது!
திங்கள் 8, மே 2023 11:29:39 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 97.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில், 10,498 மாணவிகள், 8,513 மாணவர்கள் என மொத்தம் 19ஆயிரத்து 11 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்கள் 8196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது 96.28 சதவீதம் ஆகும். தமிழகத்தில் 5வது இடம் பிடித்துள்ளது. மாணவிகள் 10,313 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.24 சதவீதம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18ஆயிரத்து 509 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.36 ஆகும். பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஜூன் 19-ல் நடைபெறும் துணைத்தேர்வுக்கு வின்ணப்பித்து பங்கேற்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடலோர கிராம பள்ளி மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!!
செவ்வாய் 30, மே 2023 9:08:02 PM (IST)

வட மாநிலதொழிலாளர்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு
செவ்வாய் 30, மே 2023 9:01:40 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா
செவ்வாய் 30, மே 2023 7:59:19 PM (IST)

வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 30, மே 2023 7:46:16 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
செவ்வாய் 30, மே 2023 5:36:50 PM (IST)

மணிமேகலை விருதுபெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 30, மே 2023 4:27:42 PM (IST)
