» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தி.மு.க. தொகுதி பார்வையாளர்கள் நியமனம்- துரைமுருகன் அறிவிப்பு

சனி 25, மார்ச் 2023 4:45:26 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளரணி செயலாளர் பெருமாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கரன்கோவிலுக்கு தூத்துக்குடி ஜோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளரணி செயலாளர் பெருமாள் மற்றும் விளாத்திக்குளத்துக்கு தணிக்கைக்குழு உறுப்பினர் வேலுசாமி, கோவில்பட்டிக்கு சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை செயலாளர் ஜோசப்ராஜ், திருச்செந்தூருக்கு விவசாய அணி துணை செயலாளர் செல்லப்பா, ஸ்ரீவை குண்டத்துக்கு சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் டாக்டர் சபி, ஓட்டப்பிடாரம் (தனி) விவசாய அணி துணை செயலாளர் முதுகுளத்தூர் முருகவேல் ஆகியோர் தொகுதி பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதே போல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல், வாசுதேவநல்லூர் (தனி) விவசாய அணி துணை செயலாளர் நல்ல சேதுபதி, கடையநல்லூர் தொண்டரணி துணை செய லாளர் ஆவின் ஆறுமுகம், தென்காசி துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், ஆலங்குளத்துக்கு தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ் ராஜன் ஆகியோர் தொகுதி பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள னர்.

நெல்லை மாவட்டம், நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், பாளை மகளிரணி செய லாளர் ஹெலன் டேவிட்சன், அம்பை அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் சிவராஜ், நாங்குநேரி மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டார்வின், ராதா புரம் வர்த்தக அணி இணை செயலாளர் தாமரை பாரதி ஆகியோர் நியமனம் செய் யப்பட்டுள்ளனர். சட்டமன்ற தொகுதி பார்வையாளராக நியமிக்கப் பட்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்குரிய மாவட்ட செயலாளருடன் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை செயல்படுத்திட வேண்டும்.

ஒவ்வொரு தொகுதி யிலும் தலா 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்த்து 1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் 'உடன்பிறப்புகளாய் இணை வோம்' இயக்க பணிகள் செவ்வனே நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை இப்பணி விவரங்களை தலைமை கழகத்திற்கு அறிக்கையாக சமர்ப்பித்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory