» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் கொத்தனார் தற்கொலை!

சனி 4, பிப்ரவரி 2023 10:57:22 AM (IST)

கோவில்பட்டியில் மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மறவர் காலனி, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் செல்வம் (51). கொத்தனாராக வேலைபார்த்து வந்தார். இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி கண்டித்துள்ளார். இதனால் குடுமபத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக கடந்த கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory