» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிராக்டர் கவிழ்ந்து விபத்து: விவசாயி பரிதாப சாவு

வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:10:14 AM (IST)

தூத்துக்குடி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே  விவசாயி பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள காசிலிங்க புரத்தை  சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் ராஜா (49). விவசாயி, இவர் நேற்று புல் அறுக்கு எந்திரத்த்தை ஏற்றிக் கொண்டு பொட்டலூரிலிருந்து  செக்காரக்குடிக்கு டிராக்டரை ஓட்டி சென்றார். கொம்புகாரநத்தம் கிராமம் அருகே சென்றபோது டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த ராஜா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜமால் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory