» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திருமண மண்டபத்தில் திருடிய 2பேர் கைது!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:04:18 AM (IST)

தூத்துக்குடியில் திருமண மண்டபத்தில் தடுப்பு வேலிகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி போல்பேட்டை உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கார் பார்க்கிங் பகுதியில் இருந்த இருப்பு தடுப்பு வேலிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.4ஆயிரம் ஆகும். இதுகுறித்து வடபாகம்  காவல் நிலையத்தில் மண்டபத்தின் பொறுப்பாளரான செல்வகுமார் என்பவர் புகார் செய்தார். 

அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த தேவராஜ் மகன் சந்தோஷ் குமார் (19), வெள்ளப் பாண்டி மகன் சந்தன்ராஜ் (22) ஆகிய 2பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்து இரும்புக் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory