» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திருமண மண்டபத்தில் திருடிய 2பேர் கைது!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:04:18 AM (IST)
தூத்துக்குடியில் திருமண மண்டபத்தில் தடுப்பு வேலிகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி போல்பேட்டை உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கார் பார்க்கிங் பகுதியில் இருந்த இருப்பு தடுப்பு வேலிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.4ஆயிரம் ஆகும். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் மண்டபத்தின் பொறுப்பாளரான செல்வகுமார் என்பவர் புகார் செய்தார்.
அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த தேவராஜ் மகன் சந்தோஷ் குமார் (19), வெள்ளப் பாண்டி மகன் சந்தன்ராஜ் (22) ஆகிய 2பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்து இரும்புக் கம்பிகளை பறிமுதல் செய்தனர்.