» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பிஆர்ஓ அலுவலக ஊழியர் திடீர் மாயம் - போலீஸ் விசாரணை!
வியாழன் 2, பிப்ரவரி 2023 10:38:20 AM (IST)
தூத்துக்குடியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி ஜெயலாணி தெருவைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் மகன் அப்துல் காதர் (28), இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். கடந்த 24ம் தேதி முதல் இவரை காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.