» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் பொறுப்பேற்பு!
புதன் 1, பிப்ரவரி 2023 4:48:50 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்த துணை ஆணையர் பதவியில் தற்போது சேலத்தைச் சேர்ந்த குமார் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்றவர். ஏற்கனவே வேலூர், தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக பதவி வைத்தவர். தற்போது மாநகராட்சிகள் அனைத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதால், ஏற்கனவே மாநகராட்சி ஆணையராக இருந்த குமார் தற்போது தூத்துக்குடியின் துணை ஆணையராக பணி நியமனம் செய்யப்பட்டு வந்துள்ளார்
தூத்துக்குடி மாநகராட்சியில் துணை ஆணையர் பதவி வெகுகாலமாக நிரப்பப்படாமல் இருந்ததால் ஆணையர் சரி பார்த்த பின்பு தான் கோப்புகள் கையொப்பமிடப்பட்டு வந்தது. தற்போது துணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் மாநகராட்சி பணிகள் விரைவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
MauroofFeb 3, 2023 - 11:04:30 AM | Posted IP 162.1*****