» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில்வே வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி : 2பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 4:28:47 PM (IST)
தூத்துக்குடியில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மாரியப்பன் (65), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் இராஜேஸ்வரன் (28) மற்றும் சிலர் சேர்ந்து தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துகிருஷ்ணன் (34) என்பவர் மற்றும் அவரது சகோதரரிடம் இரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 01.02.2022 முதல் 31.12.2022 வரை பல தவணைகளில் வங்கி கணக்குகளிலும், ரொக்கப் பணமாகவும் மொத்தம் ரூ.30 லட்சம் பணத்தை பெற்று கொண்டு முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரரை மேற்கு வங்காளம் ஹவுராவிற்கு அழைத்துச் சென்று, மெடிக்கல் செக்அப் மற்றும் போலி சான்றிதழ் வாங்கி கொடுத்தும் இரயில்வே பணிக்கு பயிற்சி என கூறி கொல்கத்தா, டெல்லி என அலைக்கழித்தும் வேலை வாங்கி கொடுக்காமலும்மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து முத்துகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மாரியப்பன் மற்றும் இராஜேஸ்வரன் ஆகிய 2 நபர்களையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் இதுபோன்று பல நபர்களிடம் இரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மொத்தம் ரூபாய் 1 கோடியே 28 லட்சம் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)
