» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் வழக்கறிஞருக்கு மிரட்டல்: இளைஞா் கைது!

புதன் 25, ஜனவரி 2023 8:02:38 AM (IST)

கோவில்பட்டியில் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சிந்தாமணி நகா் 2வது தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி வழக்கறிஞா் மாரீஸ்வரி. இவா் கடந்த 2021 ஆம் ஆண்டு முகமது சாலிஹாபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த

இளங்கோவன் மகன் மனோ என்ற கருப்பசாமிக்கு (24) எதிராக நீதிமன்றத்தில் ஆஜரானாராம். இதை முன்விரோதமாக வைத்துக் கொண்டு, மாரீஸ்வரி வீட்டின் முன்பாக அவரை அவதூறாகப் பேசிய கருப்பசாமி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital





Thoothukudi Business Directory