» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி மீது பைக் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் கைது
புதன் 25, ஜனவரி 2023 7:49:06 AM (IST)
நாலாட்டின்புத்தூர் அருகே மனைவி மீது மோட்டார் பைக் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள விட்டிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பாராஜ் மகன் சந்திரமோகன் (39). டிரைவரான இவருக்கு ராதா (35) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சந்திரமோகன் - ராதா தம்பதியினர் தற்போது பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மகன்கள் இருவரும் தாய் ராதாவுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ராதா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோாது, எதிரே மோட்டார் பைக்கில் வந்த சந்திரமோகன், மனைவி மீதுள்ள கோபத்தில் பைக்கை அவர் மீது ஏற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராதா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
