» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதுக்கோட்டை பள்ளியில் கிறிஸ்துமஸ் ஈகை விழா
புதன் 7, டிசம்பர் 2022 3:54:57 PM (IST)

புதுக்கோட்டை, பி.எஸ்.பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் ஈகை விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் ஈகை விழா நடைபெற்றது. விழாவிற்கு தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் லே செயலரும், பள்ளியின் தாளாளருமாகிய நீகர் பிரின்ஸ் கிப்சன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை சேகரகுரு தாமஸ் ரவிக்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார். திருமண்டல குருத்துவ செயலர் டாக்டர் இம்மானுவேல் வான்ஸ்றக் தேவசெய்தி அளித்தார்.
விழாவில் மாணவ, மாணவிகளின் கிறிஸ்துமஸ் பாடல்கள், கிறிஸ்து நாடகம், சாண்டா குலோஸ் வருகை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருமண்டல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், திருமண்டல பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை வழங்கினர். திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன் நிறைவு ஜெபம் செய்து ஆசி வழங்கினார். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை தவமணி தேவி தலைமையில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் கலை விழா போட்டி : தூத்துக்குடி ஏ.பி.சி., மகளிா் கல்லூரி வெற்றி
சனி 4, பிப்ரவரி 2023 5:35:36 PM (IST)

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 4, பிப்ரவரி 2023 4:48:10 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் : தென் மண்டல ஐஜி உத்தரவு
சனி 4, பிப்ரவரி 2023 4:30:51 PM (IST)

பிட்காயின் முதலீடு என்ற பெயரில் ரூ.12லட்சம் மோசடி : வாலிபர் கைது!
சனி 4, பிப்ரவரி 2023 4:09:01 PM (IST)

தூத்துக்குடியில் விஷம் கலந்த அரிசியை தின்ற 3 ஆடுகள் சாவு: போலீசார் விசாரணை
சனி 4, பிப்ரவரி 2023 3:19:27 PM (IST)

நாசரேத்தில் திமுக சார்பில் அண்ணா நினைவு அஞ்சலி
சனி 4, பிப்ரவரி 2023 11:58:08 AM (IST)
