» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொடி நாள் நிதி வசூல் : ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
புதன் 7, டிசம்பர் 2022 11:01:34 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொடி நாள் நிதி வசூலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், நிதி வழங்கித் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், நம் நாட்டின் பாதுகாப்புக்கு அயராது பாடுபட்ட முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்கள் நலன் காக்கும் விதமாக பொதுமக்களும், அலுவலா்களும் கொடி நாள் நிதியினை தாராளமாக வழங்க முன் வர வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரா் நலத்துறை உதவி இயக்குநா் தெய்வசிகாமணி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.