» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி: ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் புகார்!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 3:48:50 PM (IST)



தூத்துக்குடியில் கடந்த 2018 ஆண்டில் நடந்தது போன்று மீண்டும் ஒரு சம்பவத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இது தொடர்பாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு : தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் உள்ள தீய சக்திகள் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக பொய் பிரச்சாரத்தின் விளைவாக லாரி ஓட்டுநர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், சிறு - குறு வணிகர்கள், பெண்கள் என இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். ஸ்டெர்லைட் என்னும் தனிப்பட்ட நிறுவனத்தை குறிவைத்து மாசுபாடு பற்றி பல வதந்திகள் பரப்பப்பட்டன. 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மீண்டும் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். 2018ஆம் ஆண்டு போல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வருகின்ற 2022 டிசம்பர் 12ஆம் தேதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், ஸ்டெர்லைட்டுக்கு சொந்தமான நிலத்தை மறுபங்கீடு செய்யக்கோரி ஜனவரியில் தொடங்கி 100 நாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். இதுபோன்ற அனைத்து நிகழ்வுகளும், 2018இல் நடந்த மக்கள் விரோத செயல்களையே நினைவூட்டுகின்றன. மீண்டும் மக்களை தவறாக வழிநடத்தி, 2018 ஆம் ஆண்டு போல் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க நினைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

P.S. RajDec 7, 2022 - 10:02:27 PM | Posted IP 162.1*****

அந்த நான்கு பேரும் சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள். எவ்வளவு வாங்கினார்கள் ?

RAJADec 7, 2022 - 01:59:14 PM | Posted IP 162.1*****

GOVERNMENT SHOULD BE DISMANTLE STERLITE

peopleDec 6, 2022 - 08:03:55 PM | Posted IP 162.1*****

yunkalukellam manachachi enpathey illaiya 4 persons koncham youchithuppaarunkal makkelee.

தேவேந்திரன்Dec 6, 2022 - 06:58:31 PM | Posted IP 162.1*****

முதலில் இவர்களை பிடித்து உள்ளே போடணும். அத்தனை உயிர்களை இழந்த பின்னும் இவர்கள் மக்களுக்கு விரோத போக்கை எடுக்க எவ்வளவு தைரியம். இவர்களும் ஒருவகையான கூலி படைதான்.

JRTUTDec 6, 2022 - 04:16:38 PM | Posted IP 162.1*****

athavathu 4 varushama velai ilama irukenga appadi thana

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory