» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சி.எஸ்.ஐ ஆலயத்தில் மாடரேட்டர் விரட்டியடிப்பு! தூத்துக்குடியில் பரபரப்பு!!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 11:05:07 AM (IST)



தூத்துக்குடி சண்முகபுரம் ஆலயத்திற்கு வந்த சி.எஸ்.ஐ மாடரேட்டர் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பெருமன்ற கூட்டம் தூத்துக்குடி சண்முகபுரம் சி.எஸ்.ஐ ஆலயத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பாதிரியார்களின் ஓய்வு வயதை 67ல் இருந்து 70ஆக உயர்த்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. 

இதற்கு திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் கடும் பலர் எதிர்ப்பு தெரிவித்த வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பேராயர் (பொறுப்பு) ரவீந்திரன், மாடரேட்டர் தர்மராஜ் ரசாலம் ஆகியோர் இன்னோவா காரில் சண்முகபுரம் சி.எஸ்.ஐ ஆலயத்திற்கு வந்தனர். அப்போது ஆலய வளாகத்தில் கூடியிருந்த திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், அவர்களை உள்ளே விடாமல் தடுத்து விரட்டியடித்தனர். 

ஏற்கனவே பேராயராக இருந்த தேவசகாயம் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் நீக்கப்பட்டார். தற்போது உள்ள மாடரேட்டர் இன்னும் ஒரு மாத காலத்தில் ஓய்வு பெறும் நிலையில், 3ஆண்டுகள் பதவியை தக்கவைப்பதற்காக ஓய்வு வயது உயர்த்தி தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிஎஸ்ஐ ஆலயத்தில் மாடரேட்டர் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

NAVALLANDec 6, 2022 - 04:39:29 PM | Posted IP 162.1*****

சம்பளம் இல்லாமல் ஊழியம் பண்ணுகிறவர்களுக்கு 90வயது வரை வேலை கொடுக்கலாம். ஆனால் காசு இல்லாமல் யாரும் வரமாட்டார்கள். இந்த தொழிலே பணத்துக்காக. 60 வயது வரை நல்ல நிறுவனத்தில் பணி செய்து சம்பாதித்து விட்டு , ரிட்டயர் ஆன பிறகு சம்பாதிப்பதற்காக ஊழியம் பண்ணுகிறேன் என்று ஏமாற்றுகிறவர்கள் இவர்கள்.

NahaiDec 6, 2022 - 02:50:29 PM | Posted IP 162.1*****

70 enna 80 aanalum ஊழியம் செய்யலாம் முடியும் என்றால் தனியா செய்யலாமே ..

சாமுவேல்Dec 6, 2022 - 02:19:38 PM | Posted IP 162.1*****

இவர்கள் கடவுளுக்காக ஊழியம் செய்ய வரவில்லை. ஊதியத்தை தேடி வந்தவர்கள். கூடிய சீக்கிரம் கிறிஸ்தவ மதத்தை அழித்து விடுவார்கள்

faithDec 6, 2022 - 01:33:42 PM | Posted IP 162.1*****

thodarnthu pala oolal kutrasatugalum, kulappangalum nadanthu varum CSI nirvagathai Thamilaga Arase eduthu nadatha vendum.

Immanuel வான்சரக்குDec 6, 2022 - 01:06:38 PM | Posted IP 162.1*****

இந்த பாதிரிகள் 60 வயதுக்கு மேல் 10,000 ரூபாய் consolidated சம்பளத்தில் வ்ட மாநில ஊழியத்துக்கு அனுப்பனும். அவ்வளவு பேரும் VRS வாங்கி விடுவாங்க.

MULLAIDec 6, 2022 - 12:22:03 PM | Posted IP 162.1*****

இவர்களுக்கு ப்ரோபஸ்ர் இணையான சம்பளம் + வீடு வித் எ/சி + கரண்ட் பிரீ & நிலையான மெம்பெர் இல்லையே என்றல் CSI வருமானம் இவர்களுக்கே போதாது இதை எல்லாம் குறைக்கணும்.

ttttDec 6, 2022 - 11:54:49 AM | Posted IP 162.1*****

My comment is missing. Why?

ThanapalDec 6, 2022 - 11:30:50 AM | Posted IP 162.1*****

இவர்கள் செய்யும் சுகபோக ஊழியத்துக்கு 60 வயதே அதிகம். 100 க்கு 90 % பேர்கிட்ட கடவுள் பயமே இல்லை. உண்மையான ஊழியம் செய்யும் குருமார்கள் கிறுக்கன் போல நடத்தப்படுறாங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory