» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாலூகா அலுவலக பெண் ஊழியர் திடீர் மாயம்
ஞாயிறு 4, டிசம்பர் 2022 11:11:40 AM (IST)
ஓட்டப்பிடாரம் பகுதியில் காணாமல்போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்தவர் முத்தையா இவரது மகள் பிரியா (21). இவர் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முத்தையா, ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.