» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காங்கிரஸ் பிரமுகாின் கடையை சூறையாடியவர் கைது

வியாழன் 1, டிசம்பர் 2022 8:06:37 AM (IST)

நாசரேத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகாின் கடையை சூறையாடியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் 2ஆவது ஐசக் தெருவைச் சோ்ந்தவா் பூமிஜெயசிங் மகன் பூமி ஸ்டாலின் (40). காங்கிரஸ் பிரமுகரான இவா் நாசரேத் வியாயாரிகள் சங்க தெருவில் பிரகாசபுரம் அா்ஜூனன் என்பவரது வாடகை கடையில் மர சாமான்கள் செய்யும் தொழில் செய்து வருகிறாா். கடை உரிமையாளா் அா்ஜூனுக்கும், பரமன்குறிச்சி ஜெபசிங் என்பவருக்கும் இரு கடைகள் தொடா்பாக பிரச்னை இருந்து வருகிாம்.

இந்நிலையில் கடந்த 25ஆம்தேதி பூமிஸ்டாலின் கடையில் இருந்தபோது நாசரேத் அருகே மாணிக்கபுரம் கோயில் தெருவைச் சோ்ந்த, இந்து தேசிய கட்சி மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன், கடைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கட்டையால் அங்கிருந்த பொருள்களை அடித்து உடைத்து, மரச்சாமான்களை வெளியே தூக்கி போட்டதாக தெரிகிறது. 

இதை கண்டித்த பூமி ஸ்டாலின், அவரது உறவினா் ஆரோன் ஆகிய இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றாராம். இதுகுறித்து பூமி ஸ்டாலின் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory